இலங்கையின் அந்நிய செலாவணி 11 வீதத்தால் அதிகரிப்பு!
#SriLanka
#money
Thamilini
1 year ago
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2024 ஒக்டோபர் மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 587.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதன்படி, ஜனவரி முதல் ஒக்டோபர் வரையில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 5,431.54 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
2023 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 11.7% அதிகரிப்பு என மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.