5,000 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்காவில் ஒருவர் கைது‘!
#SriLanka
#Arrest
#Airport
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 months ago

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், மொத்தம் 5,000 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை (23 அட்டைப் பெட்டிகள்) கடத்தியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் (PNB) விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் குழு நேற்று (22) இரவு நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் (PNB) விமான நிலையப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



