பொது பாதுகாப்பு அமைச்சரின் பதவிக்கு எதிராக மனு!
#SriLanka
Mayoorikka
10 months ago
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்க உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை இலங்கை பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா சமர்ப்பித்துள்ளார்.
அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நவம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதியால் ஆனந்த விஜேபால பொது பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதாக மனுதாரர் சம்பந்தப்பட்ட மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்