வடமத்திய மாகாணத்தில் ரத்து செய்யப்பட்ட பரீட்சைகள் மீள ஆரம்பம்!
#SriLanka
#Examination
Thamilini
1 year ago
வடமத்திய மாகாணத்தில் ரத்து செய்யப்பட்ட 11 ஆம் வகுப்புப் பரீட்சைகள் இன்று (03) முதல் மீண்டும் தொடங்கும் என்று மாகாணக் கல்விச் செயலாளர் சமன் குமார ஜெயலத் தெரிவித்தார்.
வடமத்திய மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு இறுதி தவணை தேர்வுகள் வினாத்தாள் கசிவு சம்பவத்தால் ரத்து செய்யப்பட்டன.
அதன்படி, அரச சாதாரண தரப் பரீட்சைக்கு வழங்கப்பட்டுள்ள அதே பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இந்த தவணைப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வட மத்திய மாகாண கல்விச் செயலாளர் சமன் குமார ஜயலத் தெரிவித்தார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்