பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிசு பராமரிப்பு சிகிச்சை நிலையம்!
#SriLanka
Mayoorikka
4 months ago

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட அதிதீவிர சிசு பராமரிப்பு சிகிச்சை பிரிவு இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் தலைமையில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த சிசு அதி தீவிர சிகிச்சை பிரிவை திறந்துவைத்தார்.
இச் சிகிச்சை பிரிவானது இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளினுள் மிகப் பெரிய கட்டட வசதிகளுடன் கூடிய தாய்மார்களும், தங்கியிருக்க கூடிய அதி சொகுசு சேவைகளை கொண்ட கட்டிடமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



