மதுபோதையில் பிடிப்படும் வாகனங்கள் தொடர்பில் பொலிஸார் எடுத்துள்ள தீர்மானம்!
#SriLanka
#Police
Thamilini
11 months ago
மதுபோதையில் பிடிப்படும் வாகனங்கள் சம்பந்தமான அனைத்து வழக்குகளிலும் 12 மாதங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்படும் அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் பொலிஸாரால் இரத்து செய்யப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனவே மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் என அனைத்து சாரதிகளையும் இலங்கை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் அமுல்படுத்தப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே பொலிஸார் இதனை அறிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று (26) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 395 மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.