வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
#SriLanka
#government
#vehicle
Dhushanthini K
6 months ago

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது டிசம்பர் 14, 2024 முதல் அமலுக்கு வரும்.
2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (18.12) தெரிவித்தார்.
இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக திறக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டினார்.
இதன்படி, மூன்று வகையாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.



