கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவரின் சடலம் மீட்பு!
#SriLanka
Thamilini
1 year ago
களுத்துறை, செருபிட்ட பிரதேசத்தில் மேம்பாலத்தின் கீழ் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
களுத்துறை தெற்குப் பொலிஸாரின் கூற்றுப்படி, கொலை செய்யப்பட்டவர் செருபிட காலனியைச் சேர்ந்த 42 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.