செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்கு வவுனியாவில் அஞ்சலி!
#SriLanka
#Vavuniya
Mayoorikka
11 months ago

முல்லைத்தீவு செஞ்சோலையில் விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 18 வது ஆண்டு நினைவுநாளான இன்று அஞ்சலி நிகழ்வொன்று வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்ட கொட்டகையில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் மரணமடைந்த மாணவர்களின் புகைப்படங்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு மலர் அஞ்சலியும் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.



