வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா விடுதலை: நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
#SriLanka
#Mannar
#Hospital
Mayoorikka
11 months ago

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மன்னார் நீதவான் நீதிமன்றினால் இரண்டு சரீரப் பிணையில் சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தீர்ப்பானது இன்று (7.8.2024) மன்னார் நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது.



