இலங்கை இராணுவ வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
11 months ago

ஆசிய மகளிர் கிரிக்கெட் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை இராணுவ வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இன்று (05.08) இராணுவத் தலைமையகத்தில் இராணுவப் பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே நிதியுதவியை வழங்கியுள்ளார்.
சார்ஜன்ட் டி.எம்.எஸ்.எம்.கே.தசநாயக்க, சார்ஜன்ட் டபிள்யூ.ஜி.எஸ்.கே.குலசூரிய, சார்ஜன்ட் என்.என்.டி.சில்வா மற்றும் லான்ஸ் கோப்ரல் எம்.ஏ.ஏ.சஞ்சீவனி ஆகியோருக்கு இந்த ஊக்குவிப்பு வழங்கப்பட்டது.
ஆசியக் கிண்ணத்தை வென்றமைக்காக வீரர்களை வாழ்த்திய இராணுவத் தளபதி, போட்டியில் அவர்களின் சிறப்பான ஆட்டத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.



