ஜீவ ஊற்றின் ஊடாக தென்னைமரமாவடியில் நான்கு வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ள நிறுவனம்!

திருகோணமலை மாவட்டத்தில் தென்னைமரமாவடியில் நான்கு நிரந்தர வீடுகள் உதயமாகின்றன. இவ்வீடுகள் நான்கும் ஜீவ ஊற்று அன்பின் கரம் மற்றும் Pledge to Restore Foundation உம் இணைந்து பயனாளிகளின் கையில் கையளிக்கப் படுகின்றன.
எதிர்வரும் 8 ஆம் திகதி இந்த நான்கு வீடுகளும் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவிருக்கின்றன.
இந்த வீடுகளின் திறப்பு விழாவிற்கு தென்னைமரமாவடி கிராம உத்தியோகஸ்த்தர்(GS), அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்(DO), கிராம அபிவிருத்தி சங்கம்(RDS), மாதர் கிராம அபிவிருத்தி சங்கம(WRDS), கோவில் நிருவாகம(TC), கமக்கார அமைப்பு, பெண்கள் கமக்கார அமைப்பு, மீனவர் சங்கம், கிராம விளையாட்டு கழக அமைப்பு, சனசமூக நிலையம், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள், மற்றும் வைத்திய சாலை அதிகாரிகள் மற்றும் ஏனைய அமைப்புக்கள், கிராம மக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்பதோடு,
ஜீவ ஊற்று அன்பின் கரத்திற்கும் Pledge to Restore Foundation அமைப்பிற்கும் உங்கள் ஆசீர் வாதங்களையும் பாராட்டுக்களையும் வழங்குமாறு தங்களை மிகவும் பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.



