ஜனாதிபதி தேர்தல் : வாக்கு சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
11 months ago

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அடிப்படை அச்சிடும் பணிகள் அரசாங்க அச்சகத்தினால் பூர்த்தி செய்யப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மற்றும் பிணைப் பணம் தொடர்பான அச்சிடும் பணிகளை அரச அச்சகம் பூர்த்தி செய்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகளை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலும் பத்திரிகைகளால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்டச் செயலாளரை தேர்தல் அதிகாரியாக நியமித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை அறிவித்து தேர்தல் ஆணையம் அரசிதழை வெளியிட்டுள்ளது.



