பாராளுமன்றத்தின் நுழைவு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பொல்துவ சந்திப்பில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நேற்று (27) பிற்பகல் வீதியில் வீழ்ந்த மரமொன்றை அகற்றும் போது வீதியில் ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் கார் பலத்த சேதமடைந்ததுடன், சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மரத்தை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் குறித்த வீதியூடான போக்குவரத்து தடை பட்டுள்ளது.