வவுனியா விசேட புலனாய்வு பிரிவினருடன் பொலிஸார் யாழில் செய்த நடவடிக்கை!
#SriLanka
#Vavuniya
Mayoorikka
2 years ago
வவுனியாவில் உள்ள பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட வவுனியா போதை ஒழிப்பு குற்றப்பிரிவினர் சூழ்ட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 30.5 கிலோகிராம் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது வடமராட்சி கிழக்கு பகுதியை சேர்ந்த 35,36 வயதுடைய இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபர்களை மருதங்கேணி பொலிஸாரிடம் பாரப்படுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா தலைமை பொலிஸ்நிலையத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொருப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் றிஸ்வி தலைமையிலான குழுவினரே கஞ்சாவுடன் நபர்களை கைது செய்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது