கல்லூரி ஆட்சேர்ப்புக்கு 60,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#Teacher
Thamilini
1 year ago
புதிய கல்லூரி ஆட்சேர்ப்புக்கு 60,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரத்திற்குள் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனக் கூறிய அவர், கல்லூரி பயிற்சி முடித்த 4,160 பேர் கல்லூரிகளை விட்டு வெளியேற உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு 23,005 பேர் பணியமர்த்தப்படுகின்றனர் என்றார்.