ஜனாதிபதித் தேர்தலையும் பிற்போட வியூகம் அமைக்கப்படுகிறது - சுரேஷ் பிரேமச்சந்திரன்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 weeks ago
ஜனாதிபதித் தேர்தலையும் பிற்போட வியூகம் அமைக்கப்படுகிறது - சுரேஷ் பிரேமச்சந்திரன்!

EPRLF தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று (17.04) இடம்பெற்றது.  

இதன்போது, தேர்தல்கள் பிற்போடுவற்கான காய்நகர்த்தல்களை அரசு மேர்கொள்கிறது என்னும் சந்தேகம் வலுக்கிறது எனவும், நடத்த வேண்டிய உள்ளூராட்சி, மாகாண சபைகள் காலவரையறையற்று பிற்போடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலையும் பிற்போட வியூகம் அமைக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

அறகளையப் போராட்டம் போல் மீண்டும் நாடுதழுவிய மக்கள் எழுச்சியை ஏற்படுத்த  வேண்டிய தேவை ஏற்படுவதாக உணர்கிறோம் எனவும், தமிழ் பொது வேட்பாளரின்  அவசியம் பற்றி சுமந்திரன் உணரவேண்டும் அதைவிடுத்து அது தேவையற்றது என்று கூறுவது நியாயமற்ற பேச்சு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.