காவல் துறையினர் பணியில் இருக்கும்போது அதிக பலத்தை பிரயோகத்தால் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
மதவாச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் இளைஞன் ஒருவரின் விதைப்பை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றவாளிகள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் கருத்து தெரிவித்தார்.
காவல்துறை அதிகாரிகள் பணியில் இருக்கும் போது கூட அதிக பலத்தை பயன்படுத்தினால், அவர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டவிரோத போதைப்பொருள், மதுபானம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.