இலங்கையில் நீண்ட நாட்களின் பின்னர் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு!

#Corona Virus #SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
இலங்கையில் நீண்ட நாட்களின் பின்னர் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு!

இலங்கையில் நீண்ட நாட்களின் பின்னர் கொரோனா மரணம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இதன்படி  குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. 

இதன் காரணமாக, நோயாளி சிகிச்சை பெற்ற வோட் தொகுதியில் உள்ள நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது கோவிட் தொற்றுநோய் நிலைமை புறக்கணிக்கப்பட்டபோது மீண்டும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.