ஜப்பானின் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்கள் இலங்கைக்கு கையளிப்பு!

#SriLanka #Japan #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
3 weeks ago
ஜப்பானின் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்கள் இலங்கைக்கு கையளிப்பு!

ஜப்பானின் மானியமாக, உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்களின் கையிருப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.  

கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளுக்காக 8.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானியமாக பெறப்பட்டுள்ளது. 

வெளிநாட்டினரால் இலங்கைக்கு  கொண்டு வரப்படும் தொற்றுநோய்கள் போன்ற பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் நோய் நிலைமைகளை கண்காணிக்க இது பயன்படுத்தப்படுகிறது.

 இந்த திட்டத்தின் கீழ், கண்டறியும் ஸ்கேனர்கள் தவிர, பேக்கேஜ் ஸ்கேனர்கள், முழு உடல் ஸ்கேனர்கள், வெளிநாட்டு பாஸ்போர்ட் ஸ்கேனர்கள் மற்றும் பயோமெட்ரிக் அணுகல் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.  

இதன்படி, முதல் தொகுதி உபகரணங்கள் இன்று (10.04) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்  மிசுகோஷி ஹிடேகி அவர்களினால் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் திரு நிமல் சிறிபால டி சில்வாவிடம் கையளிக்கப்பட்டது.