மைத்திரி நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை குறித்து காவிந்த ஜயவர்தன சந்தேகம்!

#SriLanka #Maithripala Sirisena #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
3 weeks ago
மைத்திரி நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை குறித்து காவிந்த ஜயவர்தன சந்தேகம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு செல்வது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.  

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட   மைத்திரிபால சிறிசேன வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இந்த அறிக்கை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இன்று (10.04) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விஜயம் செய்த போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அவர் கூறிய அறிக்கையிலிருந்து தப்பி ஓட முடியாது, ஆனால் அவர் அந்த அறிக்கைகளை மீண்டும் மீண்டும் மாற்றுவதை நாம் காண்கிறோம்.

மைத்திரி நாட்டில் எத்தனையோ பிரச்சினைகளை ஏற்படுத்தி தாய்லாந்திற்கு சென்று விட்டாரே என அஞ்சுகிறோம்.அவரை உடனடியாக வரவழைத்து சட்டத்தை அமல்படுத்துமாறு சட்ட அமலாக்க முகமைகளைக் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.