வவுனியாவில் ஸ்மார்ட் வகுப்பறை மாணவர்களிடம் கையளிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
எதிர்க்கட்சித் தலைவர் வவுனியாவில் ஸ்மார்ட் வகுப்பறையை கையளித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவினால் இன்றைய தினம் (28.03) வவுனியா வடக்கு ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை ஒன்று கையளிக்கப்பட்டது.
சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் வகுப்பறை தொகுதியானது இன்று மாணவர்களிடம் எதிர்க்கட்சித் தலைவரினால் கையளிக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான உமாசந்திரா பிரகாஷ், வன்னி தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளர் ச. நிரோஷ், ரசிகா கமகே ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்