ஈஸ்டர் தாக்குதலை யார் செய்தார்கள் என்பதை வெளிப்படுத்த நான் தயார் - மைத்திரி அறிவிப்பு

#SriLanka #Easter Sunday Attack #Maithripala Sirisena #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
ஈஸ்டர் தாக்குதலை யார் செய்தார்கள் என்பதை வெளிப்படுத்த நான் தயார் - மைத்திரி அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை நீதிமன்றம் உத்தரவிட்டாலோ அல்லது கேட்டாலோ வெளியிடத் தயார் என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

அஸ்கிரி மகா விகாரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கெடிகே ரஜமஹா விகாரையின் புதிய தர்ம மந்திர் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  "எனக்கு ஏமாற்றத்தை விட பெரிய வலி அதிகம் உள்ளது. நான் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாட்டை ஒரு நல்ல இடத்திற்கு கொண்டு செல்ல விரும்பினேன். அந்த திட்டத்தை நான் கொண்டு செல்லவில்லை. எனக்கு கிடைக்கவில்லை. 

ஆளுங்கட்சி, எதிர்கட்சியின் ஆதரவை நான் பெறவில்லை. 19வது திருத்தச்சட்டத்தால் எனது அதிகாரங்களை இழந்தேன். ஆனால் அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் தவறாக பயன்படுத்துவார்கள் என நினைக்கவில்லை.

அரசாங்கமும் எதிர்க்கட்சியும் என்னைத் தாக்கினார்கள்.அடுத்து ஈஸ்டர் வந்தது, மறுபுறம், ஈஸ்டர் தாக்குதலை உண்மையில் செய்தது யார் என்று யாருக்கும் தெரியாது, யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. நீதிமன்றம் கோரிக்கை வைத்தால் அல்லது உத்தரவு போட்டால் வந்து அறிக்கை விடுங்கள் . ஈஸ்டர் தாக்குதலை யார் செய்தார்கள் என்பதை வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன். மற்றொன்று அதை ரகசியமாக வைத்திருப்பது அந்த நீதிபதிகளின் வேலை” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!