தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் எவ்வாறு மீன்பிடிக்க முடியும்? வர்ணகுலசிங்கம் ஆவேசம்
#SriLanka
#Fisherman
Soruban
1 year ago
இந்நியாவிலே கேரள மீன்பிடி படகுகள் தூத்துக்குடி பகுதியில் மீன்பிடிக்க வருகின்றவேளை அவர்கள் மீனவர்களால் பிடிக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றபோது எவ்வாறு தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க முடியும் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று நண்பகல் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை பாண்டிச்சேரி முதலமைச்சர் குப்புச்சாமி அவர்களும் பாண்டிச்சேரி மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வருவதை கட்டுப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளதுடன் நடிகரும் மக்கள் நீதி மய்ய நிறுவுனர் நடிகர் ஹமலஹாசன் கச்சதீவு தொடர்பில் தெரிவித்த கருத்திற்க்கும் அவர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்