யாழ். வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
#SriLanka
#Douglas Devananda
#Meeting
#government
#Development
Mayoorikka
2 years ago
யாழ். வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கௌர அமைச்சரும் யாழ்- கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்தலில் இடம்பெற்று வரும் இக் கூட்டத்தில் இவ்வாண்டு பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஊடாக பிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அதற்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகளுக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

