அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் உட்பட பலருக்கு தடை உத்தரவு!
#SriLanka
#Protest
#CourtOrder
#Lanka4
#lanka4Media
#lanka4news
#lanka4.com
PriyaRam
2 years ago
கொழும்பில் சில வீதிகளுக்கு பிரவேசிப்பதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்ட 9 பேருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருதானை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இன்று பிற்பகல் விஹார மகாதேவி பூங்காவுக்கு அருகில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தனர்.
இதன்படி, குலரத்ன மாவத்தை, ஒரபிபாஷா மாவத்தை, சங்கராஜ மாவத்தை, டீன்ஸ் வீதி, டி.பி.ஜாயா மாவத்தை, வைத்தியசாலை சதுக்கம் மற்றும் அதனை அண்மித்த வீதிகள் தடைப்படுவதைத் தடுக்கும் வகையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே