பத்து மாவட்டங்கள் அதிக ஆபத்தான பகுதியாக பதிவு!
#SriLanka
#Health
#Hospital
#Dengue
Mayoorikka
1 year ago
நடப்பாண்டின் முதல் பதினைந்து நாட்களுக்குள், பத்து மாவட்டங்களில் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 5,029 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் 1,700 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். வட மாகாணத்தில் 1,494 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருவார கால டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை நாளை (16ஆம் திகதி) வெளியிடப்படலாம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.