கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் ஐரோப்பிய மக்கள்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பவேரியாவில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மியூனிச்சில் இருந்து புறப்படும் ரயில்கள், விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதன்படி ஜேர்மனியில் பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், கிறிஸ்மஸ் சந்தைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
அத்துடன் முனிச்சின் மத்திய ரயில் நிலையத்திற்கு ரயில்கள் வரவில்லை என்று Deutsche Bahn அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஜேர்மன் வானிலை சேவையானது30-40 செமீ பனி விழும் என்று மதிப்பிட்டுள்ளது.



