சந்திரிகாவிடம் ஆதரவு கோரி மன்றாடிய மைத்திரி!
#SriLanka
#Chandrika Kumaratunga
#Maithripala Sirisena
#srilanka freedom party
PriyaRam
2 years ago
எந்த கட்சிக்கும் ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்காக சுதந்திரக் கட்சிக்குள் விசேட பதவியொன்றை கோரியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களையும் அவர் நிராகரித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரே தன்னிடம் வந்து ஆதரவுகோரி மன்றாடினார் என்றாலும் தான் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்க தீர்மானிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.