திருக்கோணேஸ்வரத்தில் விசேட வழிபாட்டில் கலந்துகொண்ட இந்திய நிதி அமைச்சர்!
#India
#SriLanka
#Trincomalee
#Minister
PriyaRam
2 years ago
திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை திருக்கோணேஸ்வரம் கோயிலில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார்.
குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் குறித்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் பங்கேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.