சம்பள உயர்வு கோரி சாய்ந்தமருதுவில் போராட்டம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சம்பள உயர்வு கோரி சாய்ந்தமருதுவில் போராட்டம்!

சம்பள உயர்வு கோரி ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டமொன்று சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று  (30.10) முன்னெடுக்கப்பட்டது. 

இந்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் இருந்து 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பைக் கோரி சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு முன்னால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

images/content-image/1698674235.jpg

"ஆக்காதே! ஆக்காதே! கடனாளி ஆக்காதே!", "எமது நியாயமான சம்பள உயர்வு கோரிக்கையினை ஏற்றுக்கொள்!", "அரசே, அரச ஊழியரின் சம்பளத்தை 20,000/- ஆல் உயர்த்து!", "வேண்டும் வேண்டும் சம்பள உயர்வு வேண்டும்" போன்ற சுலோகங்களை ஏந்திய வண்ணம் சாய்ந்தமருது கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அரச உத்தியோகத்தர்களால் சம்பள உயர்வை வலியுறுத்தி நாடு பூராவும் போராட்டங்கள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

images/content-image/1698674286.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!