பாழடைந்த கட்டிடத்தில் இரு குழந்தைகளையும் கைவிட்டுச் சென்ற தந்தை கைது: தாயும் ஏற்கனவே விளக்கமறியலில்
#SriLanka
#Court Order
#Prison
Prathees
2 years ago
குழந்தைகளை பாழடைந்த இடத்தில் கைவிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நபரை இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதிமன்றம் உத்தரவிட்டது.
தலுகம பிரதேசத்தில் வெறிச்சோடிய கட்டிடமொன்றில் ஒரு வயது மற்றும் நான்கு மாத ஆண் குழந்தைகளை கைவிட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
களனி ஹிம்புதுவெல்கொட பகுதியைச் சேர்ந்த முப்பத்து மூன்று வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த குழந்தையின் தாயும் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தற்போது குழந்தை புட்பிட்டிய வீரசேகர சிறுவர் அபிவிருத்தி இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.