ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றிருந்த பிரதமர் மோடி, மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்தார்.
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகள் ஜி7 என்று அழைக்கப்படுகிறது.
தற்போது ஜப்பானில் ஜி7 மாநாடு நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜி7 நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர்.அதேசமயம், ஜப்பானில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் பிரதமரின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
ஜப்பான் சென்றிருந்த பிரதமர் மோடி, தனது பயணத்தின் போது மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்தார். இன்று ஹிரோஷிமாவில் காந்தி சிலையை திறந்து வைத்தார்.
காந்தி சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, ஜப்பானில் நடந்த ஜி7 மாநாட்டில் கலந்து கொண்டதாகவும், அங்கு ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பை பெற்றதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். சிலை நிறுவுவது அமைதிக்கு வழி வகுக்கும் என நம்புகிறார்.