திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் INS Batti Malv என்ற கப்பல்
#SriLanka
#Ship
Kanimoli
2 years ago
இந்திய கடற்படையின் ‘INS Batti Malv’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (16) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஐ 101 பேர் கொண்ட பணியாளர்களைக் கொண்ட 46 மீட்டர் நீளமுள்ள கப்பலாகும்.
கப்பல் இலங்கையில் இருக்கும் காலத்தில், இரு கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பணியாளர்கள் பங்கேற்பார்கள். தீவின் முக்கிய இடங்களை பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.