தங்க அடகு கடையொன்றில் கொள்ளையடித்த சந்தேக நபர் கைது
#Robbery
#Prison
#Investigation
#Gold
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

பியகம பண்டாரவத்த பிரதேசத்தில் தங்க அடகு கடையொன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
அங்கிருந்த பணிப்பெண்கள் இருவரை மிரட்டி 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கத்தை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், மற்றைய சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் 13ம் திகதி இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று முன்தினம் தலங்கம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



