75 லட்சம் ரூபா பண மோசடி - முன்னாள் சிஐடி அதிகாரியிடம் விசாரணை

Prathees
3 years ago
75 லட்சம் ரூபா பண மோசடி - முன்னாள் சிஐடி அதிகாரியிடம் விசாரணை

75 இலட்சம் ரூபா நிதி முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பொது பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நைஜீரியர்கள் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான விசாரணைகளின் போதே இந்த நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் கணக்கில் இருந்த எழுபத்தைந்து இலட்சம் ரூபாவை சந்தேகநபரிடம் மீள ஒப்படைக்குமாறு புலனாய்வு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதில் முன்னாள் இயக்குனர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்படுவதற்கு முன்னர் சந்தேகநபர் ஒருவரிடமிருந்து 75 இலட்சம் ரூபாவை விடுவிப்பதில் முன்னாள் பணிப்பாளர் பாரிய மோசடி செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள முன்னாள் பணிப்பாளர் பதவி உயர்வு பெற்று தற்போது வேறு பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வருகின்றார்.

பாரிய நிதி மோசடி வழக்குகள் தொடர்பில் பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நைஜீரியர்கள் உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழு மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிதி மோசடியில் ஈடுபட்ட தரப்பினரை இரண்டு தடவைகள் முன்னாள் பணிப்பாளர் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து மணிக்கணக்கில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!