சுவிற்சலாந்து பிரபல மனித உரிமை வழக்கறிஞர் ராஜாவி வழக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

1990 இல் சுவிற்சலாந்தில் ஈரானிய எதிர்க்கட்சி பிரமுகர் காசெம் ராஜாவி படுகொலை செய்யப்பட்டதற்கான விசாரணை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணையின் நீட்டிப்பை பெடரல் நீதிமன்றத்தில் பெற்றுள்ளார்.
சுவிற்சலாந்து எதிர்க்கட்சி தேசிய சபை ஈரானின் பிரதிநதியான ராஜாவி, ஏப்ரல் 24, 1990ம் ஆண்டு ஈரானின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் பல முகவர்களால், பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது இவரது ஜெனீவாவிற்கு அருகிலுள்ள கிராமமான காப்பேட்டில் உள்ள வீட்டில் இடம்பெற்றது.
புகழ்பெற்ற மனித உரிமை வழக்கறிஞருக்கு 1981 இல் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது.



