சாலையை கடக்க முற்பட்ட துறவி பேருந்து மோதி உயிரிழப்பு!

#SriLanka #Accident #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
சாலையை கடக்க முற்பட்ட துறவி பேருந்து மோதி உயிரிழப்பு!

அவிசாவளை-ரத்னபுர சாலையில் சாலையை கடக்க முயன்ற துறவி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று (15) பிற்பகல் அவிசாவளையிலிருந்து எஹெலியகொடைக்குச் சென்ற பேருந்தில் மோதி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த துறவி எஹெலியகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 77 வயதுடையவர் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4