ஓமன் கடல் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு!
ஓமன் கடற்பகுதியில் மார்ஷல் தீவுகள் கொடியுடன் சென்ற எம்கேடி வியோம் என்ற சரக்கு கப்பல் மீது ட்ரோன் படகு மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதில் சரக்கு கப்பலின் இன்ஜின் அறையில் தீப்பற்றியதில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். இதை ஓமனில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
இதனிடையே, ஓமன் நாட்டின் முசந்தம் தீபகற்பம் அருகே பலாவ் கொடியுடன் சென்ற ஸ்கைலைட் என்ற எண்ணெய் கப்பல் ஈரானால் குறிவைக்கப்பட்டது.
இதில் இந்திய கப்பல் ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும் 3 இந்திய ஊழியர்கள் காயம் அடைந்தனர். மேலும், எல்.சி.டி. அலிஹ் கப்பல் மீதான ஈரான் தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
மொத்தத்தில், மேற்கு ஆசியா முழுவதும் ஈரான் தாக்குதல்களில் 20 இந்தியர்கள் காயம் அடைந்துள்ளனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்