டித்வா பேரிடர் - உயிரிழப்பு 479 ஆக உயர்வு
#SriLanka
#Death
#Climate
#Disaster
#Missing
Prasu
51 minutes ago
டித்வா புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பதிவாகியுள்ள உயிரிழப்புக்கள் 479 ஆக உயர்வடைந்துள்ளது.
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ளது.
புள்ளிவிபரங்களின்படி, அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளதுடன், 350 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 25 மாவட்டங்களிலும் 455,405 குடும்பங்களைச் சேர்ந்த 1,614,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )