சுண்டிக்குளத்தில் மாயமான 5 கடற்படை சிப்பாய்களும் உயிரிழப்பு!
#SriLanka
Mayoorikka
54 minutes ago
முல்லைத்தீவு சுண்டிக்குளம் களப்பு பகுதியில் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியின் போது காணாமல் போன 5 கடற்படை சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுண்டிக்கும் பகுதியில் நேற்று (30) பிற்பகல் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் நடவடிக்கையின் போது 5 கடற்படை சிப்பாய்கள் காணாமல் போனதையடுத்து, அவர்களைக் கண்டுபிடிக்கக் கடற்படை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த சம்பவம் இடம்பெற்றபோது குறித்த கடற்படை சிப்பாய்கள், அப்பகுதியில் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த குழுவின் ஒரு பகுதியினர் என்று கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
