நாடு முழுவதும் ஆபத்தில் வசிக்கும் 15000 குடும்பங்கள்!
நாடு முழுவதும் 250 அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட 15,000 குடும்பங்கள் வசித்து வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) சுட்டிக்காட்டியுள்ளது.
நிலச்சரிவு அல்லது பாறைச் சரிவு ஆபத்துக்கள் குறித்த பகுதிகளில் அதிகளவு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
230 நிலச்சரிவு மண்டலங்கள் மற்றும் 20 பாறைகள் சரிவு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அபாய மண்டலங்களில் பலர் வீடுகளைக் கட்டியுள்ளனர் அல்லது சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்கால நிலச்சரிவுகளைத் தடுக்க சில பகுதிகளில் பெரிய நிலையற்ற பாறைகளை தகர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கியமான வணிகங்களுக்கு அருகில் உள்ளவர்கள் உட்பட குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டியிருக்கும், இது இடமாற்றத்தை சவாலாக மாற்றுகிறது எனவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு பலமுறை எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், சமூக மற்றும் பொருளாதார காரணங்களால் பலர் வெளியேற மறுத்துவிட்டனர். தற்போது, சுமார் 60,000 பேர் இந்த அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக ஆபத்துள்ள பகுதிகளைக் கொண்ட 13 மாவட்டங்களில் பதுளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா, மொனராகலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்கள் முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
