முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முற்றாக நிறைவு!
#SriLanka
#Kilinochchi
#Lanka4
Mayoorikka
1 month ago
முகமாலையில் கடந்த பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த கண்ணிவெடி அகற்றும் பணிகள் தற்போது முற்றாக நிறைவடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப்போரின் பின்னர், முகமாலை, வேம்பொடுகேணி, இத்தாவில், கிளாலி ஆகிய பகுதிகளில் இருந்து கண்ணிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.

கடந்த 14 வருடங்களாக சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணிகளை முன்னெடுத்த ‘ஹலோ ரஷ்ட்’ நிறுவனம் தற்போது இறுதிக்கட்டப் பணிகளையும் நிறைவுசெய்து அங்கிருந்து வெளியேறியுள்ளது.
கண்ணிவெடிகள் காரணமாக விடுவிக்கப்படாமல் இருந்த காணிகளை விடுவிப்பதற்கும் தற்போது நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
