கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் “தூய்மையான நகரம்” இறுதி நாள் நிகழ்வுகள்

இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு கரைச்சி பிரதேச சபையினால் நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் சாதனையாளர்கள் கௌரவிப்பும் நடைபெற்றதுடன் கிளிநொச்சியில் உள்ள உணவகங்களை A தர நிர்ணயத்தில் நடாத்தும் உணவகங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டார் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன் அவர்களும் விருந்தினர்களாக பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சத்தியராகவன் தொலைநோக்கி ரோட்டரிக் கழகத்தின் தலைவர் வைத்தியர் கௌதமன் ஓய்வு நிலை அதிபர் திருமதி மீனலோஜினி இதயசிவதாஸ் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் காவேரிக் கலாமன்ற இயக்குனர் வணபிதா யோசுவா அடிகளார் கண்டாவளை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி இரவீந்திரநாதன் கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர் கிரேசி பிரதேச சபையின் உறுப்பினர்கள் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



