மந்திரிமனை பாதுகாக்க வேண்டியது அவசியம்! அமைச்சர் பிமல் ரத்நாயக்க
#SriLanka
#Jaffna
#Lanka4
Mayoorikka
1 hour ago

இலங்கையின் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரிமனை பாதுகாக்க வேண்டியது அவசியம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சருடன் கலந்துரையாடி, சின்னத்தை பாதுகாப்பதற்கான செயற்பாட்டினை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனையை, நேற்று நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னரே, அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனை இடிந்து வீழ்ந்து பகுதியளவில் சேதம் அடைந்துள்ளது.
இந்த நிலையில், தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுடனும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கலந்துரையாடியுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



