மனித புதைகுழிகளுக்கும் இனப்படுகொலைக்கும் சர்வதேச நீதி கோரி யாழில் கையெழுத்து போராட்டம்!
#SriLanka
#Jaffna
#Protest
#Semmani human burial
Mayoorikka
2 hours ago

செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளிக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாற்றத்திற்கான இளையோர் குரல் அமைப்பினால் யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் குறித்த கையெழுத்துப் போராட்டம் இன்று (15) காலை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கையெழுத்துப் போராட்டத்தில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள் உறுப்பினர்கள், யாழ். மருதனார்மடம் வர்தகர்கள், சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



