பிரான்சில் இருந்து இங்கிலாந்து எல்லையை கடக்க முயன்ற சோமாலிய பெண் மரணம்

#Death #France #Women #Boat #Migrant
Prasu
9 months ago
பிரான்சில் இருந்து இங்கிலாந்து எல்லையை கடக்க முயன்ற சோமாலிய பெண் மரணம்

பிரான்சின் வடக்கு பகுதியில் உள்ள தன்கேர்க் அருகே, சுமார் 25–30 வயதுடைய சோமாலி வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் கடல் வழியாக இங்கிலாந்தை சட்டவிரோதமாக அடைய முயன்றதாக கடல்சார் மாவட்டஆணையம் தெரிவித்துள்ளது.

மாலோ கடற்கரையில் இருந்து ஒரு சிறிய படகில் ஏறிச் செல்ல முயன்றபோது, அவர் கடலில் சிக்கியதாக, குடிபெயர்ந்தோர் உதவி அமைப்பான Utopia 56 X தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய படகுகள் சில மீட்டர் மட்டுமே நீளமுடையவை. இவை கடல் வழியாக வந்து, குடிபெயர்ந்தவர்களை ஏற்றி, அபாயகரமான பயணங்களைத் தொடங்கச் செய்கின்றன. மருத்துவர்கள் மூன்று முறை உயிர் காக்கும் முயற்சிகள் செய்தும், அவரை மீட்டெடுக்க முடியவில்லை.

அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, இது 2025 ஆம் ஆண்டில் கடல் வழியாக இங்கிலாந்து செல்ல முயற்சித்துக் கடலில் உயிரிழந்த 19வது சம்பவம் ஆகும். திங்கட்கிழமை மட்டும், பிரான்ஸ் கடல்படை மற்றும் மீட்பு படையினர், Manche மற்றும் வடக்குக் கடலில் (mer du Nord) நடைபெற்ற பல்வேறு மீட்பு நடவடிக்கைகளில் மொத்தம் 164 குடிபெயர்ந்தவர்களை மீட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4