பிரான்சில் இருந்து நாட்டுக்கு அச்சுறுத்தலான 64 பேர் நாடு கடத்தல்

#France #people #Terrorists #extradite
Prasu
10 months ago
பிரான்சில் இருந்து நாட்டுக்கு அச்சுறுத்தலான 64 பேர் நாடு கடத்தல்

இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதம் போன்ற செயற்பாடுகளில் தொடர்புபட்ட 64 பேர் இவ்வருடத்தில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Bruno Retailleau தெரிவித்தார்.

நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்கள் எனும் பட்டியல் கொண்ட Fiche S கோப்பில் உள்ளவர்களில் இருந்து அவர்கள் தெரிவுசெய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர். 

இவ்வருடத்தில் இதுவரை 64 பேர் அவ்வாறாக வெளியேற்றப்பட்டதாகவும், 5,100 பேரின் விபரங்கள் Fiche S கோப்பில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இவ்வருட இறுதிக்குள் மேலும் புதிதாக பலர் வெளியேற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754383182.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4