தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளரின் பிணை மனு தொடர்பில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு!
#SriLanka
#Court Order
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் சுதத் ஜனக பெர்னாண்டோ தாக்கல் செய்த பிணை மனு மீதான உத்தரவு ஆகஸ்ட் 07 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.
இந்த பிணை மனு மீதான உத்தரவு இன்று அறிவிக்கப்பட இருந்தது. எனினும், இந்த உத்தரவு இந்த மாதம் 07 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி இந்திரிகா கலிங்கவன்ச தெரிவித்தார்.
நாட்டின் மருத்துவமனை அமைப்பிற்குள் தரமற்ற ஆன்டிபாடி தடுப்பூசிகளை விநியோகித்த சம்பவத்தில் மனுதாரரான மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் சுதத் ஜனக பெர்னாண்டோ முதல் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
