ராஜித சேனாரத்னவின் பிணை மறுப்பு மனுவை பரிசீலனை செய்ய திகதி நிர்ணயம்!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் விடுவிக்க மறுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திருத்தக் கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 30 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று (24) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி இந்திரிகா கலிங்கவன்ச முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிணையை நிராகரித்த சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்ற தீர்ப்பின் நகல் உயர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படாததால், இந்த மனு தொடர்பாக உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டினார்.
அதன்படி, தொடர்புடைய பிணை தீர்ப்பின் நகலைச் சமர்ப்பித்த பின்னர், ராஜித சேனாரத்னவுக்காக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் மைத்திரி குணரத்னவிடம் இது தொடர்பாக தனது வழக்கை முன்வைக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.
அதன் பின்னர், மனு மீதான பரிசீலனை 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



